Thursday, July 24, 2014

வானவில்...!

ஒற்றை வண்ணத்தில் 
இரட்டை வானவில் - உன் 
இதழ்கள்.

பார்வை...!

குளிருக்கு இதமானது போர்வை - அதைவிட
சுகமானது உன் பார்வை.

கண்ணத்தில் குழி!

யானையை பிடிக்க
காட்டுக்குள் குழி!
பெண்ணே...
யாரைப் பிடிக்க உன்
கண்ணத்தில் குழி!

தாமரைப் பெண்ணாளின் நாணம்!

அதிகாலை வேளை தனில்
பொன்னிற பட்டணிந்து
வான வீதியெங்கும் விழா பரப்பி
அழகிய வண்ணமுடன்-வந்து
நிற்கின்றான் மன்னவன்!
தலைவனைக் கண்ட
செவ்விதழ் மேனியாள்-தன்
உடல் சிலிர்த்து வியர்க்கின்றாள்!
அவனது செங்கதிர் பூண்ட
விழியின் ஒளியினிலே
அகன்றது பனித்துளிகள்!
தன் மெய்யவனைப் பார்த்து
நாணுகின்றாள் இம்மங்கையவள்!